Trending News

நாளை மறுதினம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)  எதிர்வரும் 22ம் திகதி காலை 09 மணிமுதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகர சபை பகுதி, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகரசபைத் பகுதி, கொடிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதி, றத்மலானை மற்றும் சொய்சாபுர மாடி வீட்டுத் தொகுதி ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

 

 

Related posts

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

Mohamed Dilsad

ඉන්දීය අග්‍රාමාත්‍යවරයාගේ මෙරට සංචාරය හේතුවෙන් කොළඹ නගරයේ විශේෂ රථ වාහන සැලැස්මක්

Mohamed Dilsad

தேசிய சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்வு இன்று

Mohamed Dilsad

Leave a Comment