Trending News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 23 கோடி ரூபா இழப்பீடு

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக 23 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சம்பவங்களில் பலியான 184 பேரின் குடும்பத்திற்காக 18 கோடி பத்து லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மேற்படி காயமடைந்த 481 பேரில் 387 பேருக்கு இதுவரையில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான்கு கோடியே 95 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சம்பவங்களில் பலியான 43 வெளிநாட்டவர்களுக்காக இதுவரையில் இழப்பீட்டுக்கான எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

Related posts

Bolton defends Trump-Kim summit

Mohamed Dilsad

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

No Sri Lankans affected by floods, landslides in Japan – Foreign Affairs Ministry

Mohamed Dilsad

Leave a Comment