Trending News

மாணவர்களுக்கு டெப் கணினி…

(UTV|COLOMBO) கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரலாற்றில் வெற்றியை நிலை நிறுத்தி இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகளை பெற்றுக்கொடுக்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சின் வளவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார் இது கல்வி துறையில் உன்னதமான வெற்றியாகும் என்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் உள்ளிட்ட கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் இது சிறப்பான வெற்றியாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் உயர் கல்வியை கற்கும் மாணவர்களுக்கு இதன் மூலமான கல்வி நடவடிக்கைகளுக்கு ஒரு இலட்சம் டெப் கணினிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பகிரங்க விவாதத்திற்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Mohamed Dilsad

துபாயில் கைதான மாத்தறை ‘ஜங்கா’ வீட்டில் இருந்து துப்பாக்கி ரவைகள் 23 மீட்பு

Mohamed Dilsad

අංගොඩ ලොක්කාගේ මරණයට හේතුව හෙළිවෙයි

Mohamed Dilsad

Leave a Comment