Trending News

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)  நீதிபதிகளும் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்​களென, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்திருந்தமைத் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, ஒருங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்புப் பிரிவினர், கொழும்பு பிர​தான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று தெரிவித்துள்ளனர்.

அசாத் சாலி தொடர்பில், சட்டத்தரணி சீ. தொலவத்தவால் செய்யப்பட்டுள்ள முறைபாட்டுக்கு அமைய, முன்னாள் ஆளுநருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மே மாதம் 4ஆம் திகதி அசாத் சாலியின் அறிவிப்பு தொடர்பில் வெளியான அறிக்கைக்கு அமைய, தொகுக்கப்பட்ட, தொகுக்கப்படாத காணொளிகள் குற்ற தடுப்புப் பிரிவினரிடம் வழங்குமாறு, இலத்திரனியல் ஊடகங்கள் இரண்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் மீளவும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

கனரக வாகனம் பாதையில் தாழிறங்கியது .. தலவாக்கலை டயகம வீதி போக்குவத்து தடை மாற்றுவழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் – [photos]

Mohamed Dilsad

தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படாது

Mohamed Dilsad

Leave a Comment