Trending News

கன்னியாவில், விகாரை விவாகாரம் – ஜனாதிபதி மனோகணேசனுக்கு கூறியது என்ன?

(UTVNEWS | COLOMBO) -திருகோணமலை கன்னியாவில், விகாரை நிர்மாணிக்குமாறு தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது பற்றி தான் விசாரிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் தமிழ் எம்.பிகளின் தூதுக்குழுவை சந்திக்க தன்னிடம் அவர் உடன்பட்டார். இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இவ்விவகாரம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவுடன் தொடர்பு கொண்டு தான் கூறியதாகவும் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம் [VIDEO]

Mohamed Dilsad

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு 94 வயது நாகம்மாவிற்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

Mohamed Dilsad

2023 නොපැවැත්වූ පළාත් පාලන මැතිවරණයට රුපියල් මිලියන 781ක් වියදම් කරලා

Editor O

Leave a Comment