Trending News

13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 13 பேர் கொண்ட குழாமை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த இந்த குழாமில் உபாதை காரணமாக நீக்கப்பட்டிருந்த கிமோ போல் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ம் திகதி கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம்
ஜேசன் ஹோல்டர் (தலைவர்),
கிரைக் பிராத்வைட்,
டெரன் பிராவோ,
சமார் புரூக்ஸ்,
ஜோன் கெம்பெல்,
ரொஸ்டன் சேஸ்,
ரகீம் கொர்ன்வேல்,
செனோன் கேப்ரியல்,
ஜெமர் ஹெமில்டன்,
ஷிம்ரோன் ஹெட்மையர்,
ஷேய் ஹோப்,
கீமோ போல்,
கெமார் ரோச்

Related posts

இவ்வருட இறுதிக்குள் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி

Mohamed Dilsad

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல்

Mohamed Dilsad

பத்தரமுல்ல, செத்சிறிபாய முன்னாலுள்ள வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment