Trending News

டி20 கிரிக்கெட் – ஐவர் பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்றபோது, அங்கு கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பேருந்து ஒன்றில் கண்டி – பல்லேகலை மைதானத்திற்கு சென்ற 22 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுமதிச் சீட்டுக்களை சோதனைக்கு உட்படுத்தியபோது, பாதுகாப்புத் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை காரணமாக அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களுள் ஒருவர் 15 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்க்ப்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கு சந்தேகத்துக்குரிவர்களும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

Sunrisers Hyderabad beat Kolkata Knight Riders to reach IPL Final

Mohamed Dilsad

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

Mohamed Dilsad

Leave a Comment