Trending News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

Mohamed Dilsad

Arrested-Indian fishermen handed over to Jaffna Authorities for legal action [VIDEO]

Mohamed Dilsad

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment