Trending News

படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில் நேற்று 61 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்திற்குள்ளான படகில் 11 ஊழியர்கள் உட்பட 61 பேர் பயணித்துள்ளனர். ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம் முழுவதும் படகு சேவைகளை உடனடியாக நிறுத்த அம் மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழக்கப்படும் மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்

Mohamed Dilsad

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு

Mohamed Dilsad

WWE star Undertaker retires after 27-year career

Mohamed Dilsad

Leave a Comment