Trending News

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 7 ​பெண்கள் விபத்தில் படுகாயம்

(UTVNEWS | COLOMBO) – புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று(23) காலை இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ள நிலையில்,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன், இராணுவ பஸ் ஒன்று மோதுண்டதில், வானில் பயணித்த பெண்கள் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பஸ், முன்னால் பயணித்த குறித்த வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே, விபத்து நேர்ந்துள்ளதாக, பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கறுவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு

Mohamed Dilsad

Bodies of 74 Migrants Wash Up on Libyan Coast – [IMAGES]

Mohamed Dilsad

Cabinet imposes NBT to alcohol products

Mohamed Dilsad

Leave a Comment