Trending News

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.

ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் நேற்றைய தினம் 12 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தப் போராட்டம் காரணமாக நேற்றிரவு இடம்பெறவிருந்த தபால் நேர் ரயில் சேவையும் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாக்குடியரசின் மாதிரிக்கட்டமைப்பு ஜனாதிபதி தலைமையில் திறப்பு

Mohamed Dilsad

சிம்பு – ஓவியா இணையும்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….

Mohamed Dilsad

McGregor predicts knockout of Mayweather with mural at his gym

Mohamed Dilsad

Leave a Comment