Trending News

கோட்டாபயவின் இலங்கை பிரஜை தொடர்பிலான மனு விசாரணை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை சற்றுமுன் ஆரம்பமாகியது.

மேன்முறையீட்டு தலைமை நீதிபதி யசன்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் நேற்று மதியம் 1.30 முதல் மாலை 6.15 மணி வரையில் இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகள் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் டிரம்ப்

Mohamed Dilsad

இலங்கையில் மண்சரிவை குறைக்க அமெரிக்கா உதவி

Mohamed Dilsad

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

Mohamed Dilsad

Leave a Comment