Trending News

கஞ்சிபான இம்ரானின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கும் பிணை

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் உள்ள கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் பிணையில் விடுவிக்க காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சிபான இம்ரானை பார்வையிட அவரது உறவினர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியை சோதனைக்கு உட்படுத்திய போது 2 கையடக்க தொலைப்பேசிகளும் மற்றும் 2 சார்ஜர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கமைவாக கஞ்சிபான இம்ரானின் தந்தை மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களை ரத்கம பொலிஸார் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

தீபிகா கவர்ச்சி வெள்ளோட்டம்…

Mohamed Dilsad

Special Committee to prevent financial frauds

Mohamed Dilsad

Sri Lanka likely to receive light showers today

Mohamed Dilsad

Leave a Comment