(UTV|COLOMBO) – கொழும்பு – லோட்டஸ் வீதியை மறைத்து நேற்று பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வாழ்க்கைச் செலவிற்கு அமைய மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.