Trending News

பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)- யாழ்ப்பாண பல்கலைழகத்தின் வவுனியா வளாக தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஒரு வகையான காய்ச்சல் காரணமாக வவுனியா வளாகத்தை சேர்ந்த சில மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இவ்வாறு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக தங்களது பரீட்சை நடவடிக்கைகளை பிற்போடுமாறு குறித்த தொழில்நுட்ப பீட மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

உலகில் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 14 வது இடத்தில் இந்தியா

Mohamed Dilsad

காதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டி பெருமைபட்ட அதிதி ராவ்…

Mohamed Dilsad

போக்கு வரத்து நெரிசல் அதிகரிப்பே, வாகனங்களில் வரி அதிகரிப்புக்குக் காரணம்

Mohamed Dilsad

Leave a Comment