(UTV|COLOMBO) – வரலாற்றில் முதன் முறையாக வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவுக்கு இரண்டு ரோபோக்கள் சீனா அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த இரு ரோபோக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வாயல்களில் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒவ்வொரு இயந்திரத்தின் மதிப்பும் ரூ. 85.5 மில்லியன் ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.