(UTV|COLOMBO) – புத்தளம் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு உடனடியாக நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கவே நிலக்கரிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2,40,000 மெட்ரிக் தொன் நிலக்கரிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 67.39 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.