Trending News

சாதாரண தரப் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத் திருத்தப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மாதம் 26 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திருத்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதலாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top Kashmir militant Sabzar Bhat killed

Mohamed Dilsad

முஸ்லிம் பெண்கள் 9 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

Mohamed Dilsad

மோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment