Trending News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று தினங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுத்தப்படுத்துமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர மக்களைக் கேட்டுள்ளார்

Related posts

எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு

Mohamed Dilsad

குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது

Mohamed Dilsad

எல்ல – வெல்லவாய வீதி மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment