Trending News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று தினங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின், இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுத்தப்படுத்துமாறும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர மக்களைக் கேட்டுள்ளார்

Related posts

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

Mohamed Dilsad

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Mohamed Dilsad

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதால் காவற்துறை அதிகாரி காயம்

Mohamed Dilsad

Leave a Comment