Trending News

பாட்டளி சம்பிக்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று(19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின்படி முன்னாள் அமைச்சர் நேற்று(18) கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Indonesia plane crash: Pilot radioed alert on doomed Indonesian jet’s previous flight

Mohamed Dilsad

ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு…

Mohamed Dilsad

Storms, floods in Sicily kill at least 12 people; 2 missing

Mohamed Dilsad

Leave a Comment