Trending News

சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) – நாட்டில் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

ඇමති සමන්ත විද්‍යාරත්නගෙන් රුපියල් මිලියන 100ක් වන්දි ඉල්ලයි : නොදුන්නොත් නඩු දානවා – හිටපු ආණ්ඩුකාර රජිත් කීර්ති තෙන්නකෝන්

Editor O

80 ரூபாவிற்கு பெரிய வெங்காயத்தை பெற அரசு தீர்மானம்

Mohamed Dilsad

Buddhist clerics calls for programme to educate, eliminate misconceptions of Wilpattu issue [VIDEO | PICTURES]

Mohamed Dilsad

Leave a Comment