Trending News

மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நீடிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவர்கள் நாளை காலை தொடக்கம் 24 மணி நேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி , முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் 24 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரொருவர் தெரிவித்திருந்தார்.

சைட்டம் எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது காவற்துறை மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும் , மருத்துவ சபைக்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவ்வாறு மருத்துவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Special traffic plan in Colombo on Independence Day

Mohamed Dilsad

பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி தனது பதவியை இராஜினாமா செய்தார்

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment