Trending News

நயன்தாராவை நினைத்து திருமண பாட்டெழுதிய இயக்குநர்!

(UDHAYAM, COLOMBO) – பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகின்றது.

இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை என்பதே இங்கு ஹைலைட்.

இந்நிலையில், நயன்தாரா பற்றி பாடலொன்றை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாக வெளியான தகவல்தான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டொப்பிக்காக பேசப்படுகின்றது.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் திருமணம் குறித்த பாடல் ஒன்றை அவர் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலில் உள்ள வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு போல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இனிமையான திருமண நிகழ்ச்சியை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியது நயன்தாராவுடனான காதலை உறுதி செய்வது போல் உள்ளது.

Related posts

“There is No Need For me to Apologize” – Ranjan Ramanayake [Video]

Mohamed Dilsad

அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Mohamed Dilsad

சித்திரை புத்தாண்டு 2018 சுப நேரங்கள்

Mohamed Dilsad

Leave a Comment