Trending News

பாதிக்கபட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை மாவட்ட, மில்லனிய பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்களை வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் அதன் ஆரம்ப நிகழ்வாக பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்கள்; ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்; நேற்று முற்பகல் வழங்கப்பட்டது.

கேஸ் அடுப்பு, சிலின்டர், ரெகுலேற்றர் ஆகியவற்றைக் கொண்ட ஐந்தாயிரத்துக்கு அதிகமான ஒரு பொருட் தொகுதியை கொண்டதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, லித்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல முணசிங்க, பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம, மில்லனிய பிரதேச செயலாளர் சமந்திகா லியனகே ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

ரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு

Mohamed Dilsad

US Coast Guard Officer planned terror attack

Mohamed Dilsad

ஜனாதிபதியை வெவ் வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்

Mohamed Dilsad

Leave a Comment