Trending News

பரீட்சை மண்டபத்தில் வைத்து O/L மாணவர்கள் இருவர் கைது

(UTV|BADULLA)-இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முறைகேடாக தோற்றிய இரண்டு மாணவர்கள் லுனுகலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகலை மகா வித்தியாலயத்தில் இல 2 பரீட்சை மண்டபத்தில் தனியார் பரீட்சார்த்திகளாக தோற்றிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பரீட்சை இலக்கங்களை மாற்றி பரீட்சை எழுத முற்பட்டுள்ளதாக பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி , குறித்த பாடசாலைக்கு சென்ற காவற்துறையினர் , அடையாள அட்டை மற்றும் பரீட்சை அனுமதி பத்திரங்களை மாற்றி பரீட்சைக்கு தோற்றிய இருவரையும் கைது செய்துள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

17 மற்றும் 18 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

Mohamed Dilsad

Singapore fighter jets escort Scoot plane after bomb hoax

Mohamed Dilsad

Australia and Sri Lanka to strengthen cooperation to counter people smuggling

Mohamed Dilsad

Leave a Comment