Trending News

A/L பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!

(UTV|COLOMBO)-பரீட்சை முறைகேடுகள் மற்றும் பல்வேறு தவறுகள் காரணமாக 2017ம் ஆண்டின் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் புஜீத குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில் , தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் , இவர்களில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் வருடம் ஜனவரி 15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , பெறுபேறுகள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.

குறித்த தொலைப்பேசி இலக்கங்கள் கீழே…

0112784201
0112784537
0113188350
0113140314

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Labor officials to withdraw from field duties?

Mohamed Dilsad

என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்ட விஜய் சேதுபதி

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

Mohamed Dilsad

Leave a Comment