Trending News

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இதோ

(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் பதவி காலம் 5 வருடத்திற்குள் நிறைவடையும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

தனது பதவி காலம் எத்தனை வருடங்களுக்குறியது என அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசேட தீர்மானங்களை அறிவிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமே உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் நிலையில் , அதிவிசேட தீர்மானங்களை அறிவிப்பதற்காகவும் , ஆராய்வதற்காகவும் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.

1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பிற்கு அமைய 6 வருடங்களாக காணப்பட்ட ஜனாதிபதி பதவிக்காலம் 19வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

Mohamed Dilsad

வலுக்கட்டாயமாக முத்தமிட்ட பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவன அதிகாரி…

Mohamed Dilsad

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

Mohamed Dilsad

Leave a Comment