Trending News

மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

(UTV|HATTON)-நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்து எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவு பெற வராததையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பாரத்த போது அவர் கட்டிலிலேயே உயிரிழந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பாக நோட்டன் பொலிஸாரும், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

24-Hour water cut in Colombo tomorrow

Mohamed Dilsad

One out of 3 pregnancies in Sri Lanka estimated to be unplanned – SLMA, UNFPA

Mohamed Dilsad

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் வேதனை!

Mohamed Dilsad

Leave a Comment