Trending News

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 லட்சத்திற்கு அதிகாமான ரூபாய் தொகை இழப்பை அரசுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேலதிக நீதவான்  புத்திக ஸ்ரீ ராகலயிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

அவர்களை மீண்டும் மே மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Pakistan donated 10,000 metric tons of rice to assist drought affected people

Mohamed Dilsad

தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு

Mohamed Dilsad

Havelocks caught flat footed as Police run riot

Mohamed Dilsad

Leave a Comment