Trending News

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

(UTV|COLOMBO)-திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று (11) இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் மூவர் படுங்காயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை (சாணம்) ஏற்றிச்சென்ற லொறி, குயின்ஸ்பெரி பகுதியில் வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

මෙරට ආර්ථිකය ශක්තිමත් කිරීමට ආසියානු වෙලඳපොලට ඇතුළු වීම වැදගත් – අගමැති

Mohamed Dilsad

විදුලි පාරිභෝගිකයින්ට කාල පාදක ගාස්තු ක්‍රමයක් තෝරාගැනීමට අවස්ථාව

Mohamed Dilsad

IUSF students released on bail

Mohamed Dilsad

Leave a Comment