Trending News

பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|PERU)-பெரு ஜனாதிபதி பெட்ரொ பப்லோ குஸின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரேசிலிய கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக பணம் வழங்கப்பட்டது என்ற ஊழல் குற்றச் சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கட்டட நிர்மாண ஒப்பந்தம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அது தொடர்பான இரகசிய காணொளி ஒன்றும் வௌியாகியுள்ளது.

அவர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு தாம் ஒரு போதும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்கவே தமது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2016 ஜூலை பெருவின் 66 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவர் 19 மாதங்களே ஜனாதிபதியாகப் பதவி வகித்துள்ளார்.

ஏற்கனவே 10 வருடங்களின் முன்னர் அவர் அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்த போது மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு ஒன்றிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் தப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

Mohamed Dilsad

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் அந்த பெண்?

Mohamed Dilsad

Australia fires: Hundreds evacuated from coastal blaze

Mohamed Dilsad

Leave a Comment