Trending News

ரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும்-டிரம்ப்

(UTV|AMERICA)-சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.
கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு கருதி அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.
கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
ஆனால், சிரியா படைகள் ரசாயன தாக்குதல்களில் ஈடுபட்டதாக வெளியாகிவரும் செய்திகளை ரஷியா வன்மையாக மறுத்துள்ளது.
இந்நிலையில், சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய ரசாயன தாக்குதலில் 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் இதற்கு மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று எச்சரித்துளார்.
[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/04/DONALD-TRUMP-UTV-NEWS.jpg”]

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

President to appoint committee on SAITM

Mohamed Dilsad

பாடசாலைக்குள் கத்தி குத்து தாக்குதல்

Mohamed Dilsad

ආදිවාසී ජනතාව මුහුණ දෙන ගැටළු විසඳීමට පියවර ගන්නවා – අගමැතිනි හරිනි අමරසූරිය

Editor O

Leave a Comment