Trending News

அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.

(UTV|COLOMBO)-வெசாக், பொஷன் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளையும் சுகாதார மருத்துவ பணிமனையில் பதிவு செய்வது அவசியம்.

 

சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளரான விசேட நிபுணர் பபா பலிகவடன இவ்வாறு தெரிவித்தார்.

அவர் சுகாதார பணிமனையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிலிக்கையில்,
எதிர்வரும் வெசாக், பொஷன் நோன்மதி காலங்களில் அன்னதான சாலைகளை நடத்துவது பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழஙப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தானமாக வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வது தொடர்பான யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பொலித்தீன் பாவனையை தடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதென்றும் டொக்டர் பலிகவடன தெரிவித்தார.

இந்த செய்தியாளர் மாநாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன, கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ரூவான் விஜயமுனி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President wants Treasury Bond losses recovered

Mohamed Dilsad

Three Indian Navy ships arrive at Trincomalee port

Mohamed Dilsad

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

Mohamed Dilsad

Leave a Comment