Trending News

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Up-Country Train Services Restored

Mohamed Dilsad

பூட்டான் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங்

Mohamed Dilsad

”ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

Mohamed Dilsad

Leave a Comment