Trending News

திருமணம் முடிந்த கையோடு இராணுவ சிப்பாய் செய்த காரியம்…

(UTV|COLOMBO)-ஆலயம் ஒன்றில் உண்டியலை உடைக்க முற்பட்ட இராணுவ சிப்பாயை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்து புத்தளம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் – அட்டவில்லு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றில் உண்டியலை சந்தேக நபர் உடைத்து கொண்டிருந்த வேளை பிரதேசவாசிகள் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது திருமணத்திற்காக விடுமுறையில் வந்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணம் முடிந்து விடுமுறையில் இருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

Hugh Jackman starrer Logan claws way to top of box office

Mohamed Dilsad

Bangladesh confident of Coach Hathurusingha’s stay

Mohamed Dilsad

தங்கச் சுரங்கம் சரிந்ததில் 8 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment