Trending News

ஃபிபா உலக கிண்ண தொடர் – வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த ரஷ்யா!

UTV | COLOMBO – உலக கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் ரஷ்யா, சவுதி அரேபியாவை 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

1934ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடத்தும் நாடொன்று பெற்ற அதிசிறந்த வெற்றியாக இது கருதப்படுகிறது.

ஸ்டானிஸ்லேவ் செர்செசோவின் ரஷ்ய காற்பந்து அணி குறித்து அண்மைக்காலமாக பெரும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

குறிப்பாக ரஷ்ய அணி இறுதியாக விளையாடிய 7 போட்டிகளில் வெற்றிப் பெற்றிருக்கவில்லை.

இதனால் ரஷ்ய ஜனாதிபதி உள்ளிட்ட பலர் அணியை கடுமையாக விமர்சித்துவந்த போதும், நேற்றையதினம் இடம்பெற்ற போட்டியில் 78ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் மத்தியில் ரஷ்யா பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேநேரம் இந்த தொடரில் இன்றையதினம் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதுவதுடன், இலங்கை நேரப்படி இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

Mohamed Dilsad

විදේශගතව රැකියා කරන ශ්‍රී ලාංකිකයන් මේ වසරේ පළමු මාස නවය තුළ රට වෙනුවෙන් කරපු දේ

Editor O

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

Mohamed Dilsad

Leave a Comment