Trending News

நீதிமன்றின் தீர்ப்பு..

(UTV|COLOMBO)-மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்றி காவல்துறை அதிகாரிகளுக்கும், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

கம்பஹா காவல்துறையினரால் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

அதன்போது, கசிப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதி சார்பான சட்டத்தரணி வாதிட்டார்.

எனினும் அதனை நிராகரித்த நீதவான், மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக அறிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Ministry to probe N’Eliya eye vaccine incident

Mohamed Dilsad

CENS calls for immediate investigation into elephant deaths

Mohamed Dilsad

டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

Mohamed Dilsad

Leave a Comment