Trending News

மன்னார் – பேசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நுளம்பின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

(UDHAYAM, COLOMBO) – மன்னார் பேசாலை பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோயை பரப்பும் அனோபிலிக்ஸ் ஸ்டீவன்சய் என்ற நுளம்பினத்தின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேரிய தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு இந்த நுளம்புகள் பரவாதிருப்பதாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பேசாலையில் இந்த நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நுளம்பினங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசாங்கம் போதை ஒழிப்பு நடவடிக்கைகளை கடுமையான சட்ட திட்டங்களுடன் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் நிலைமைகள் குறையவில்லை

Mohamed Dilsad

வாக்குச்சீட்டுக்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பு

Mohamed Dilsad

“சைத் சிட்டி” வீடமைப்புத்திட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் மக்களிடம் கையளிப்பு….

Mohamed Dilsad

Leave a Comment