Trending News

கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ – 30 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO)-இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ‘கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ எனும் தொனிப் பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகி 31 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இக்கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை ஆற்றவுள்ளதாகவும், இதில் 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் பங்கேற்கவுள்ளதாகவும் இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும் இக்கருத்தரங்கிற்கு சார்க் நாடுகளின் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

Mohamed Dilsad

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது

Mohamed Dilsad

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment