Trending News

பகிடிவதையுடன் தொடர்புடைய மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் நிறுத்தம்

(UTV|COLOMBO)-ஒழுக்காற்று விதிகளை மீறும் பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தவறிழைப்போருக்கு பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனம் ஊடாக வழங்கப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் தளர்த்தப்பட்டாலும், மஹபொல கொடுப்பனவை மீண்டும் வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றமை, பகிடிவதை, உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கைவிடப்பட்ட 2 வாரக்கால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது

Mohamed Dilsad

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வு

Mohamed Dilsad

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment