Trending News

சந்திரிகாவுக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது

(UTV|COLOMBO)-பிரான்ஸ் அரசின் மிக உயர்ந்த கௌரவ விருதாக கருதப்படும் “Commandeur de la Légion D’Honneur” எனப்படும் விருதினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அவர் கொண்டுள்ளார் என அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை வழங்கும் நிகழ்வு பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் பேரில் கொழும்பில் உள்ள பிரான்ஸ் நாட்டுக்கான தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் குறித்த விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Iran’s internet blackout reaches four-day mark

Mohamed Dilsad

பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்

Mohamed Dilsad

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையே சந்திப்பு

Mohamed Dilsad

Leave a Comment