(UTV|COLOMBO) – அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி, தனது 04 வயது பெண் பிள்ளை மற்றும் 02 2 1/2 வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்.
அத்துடன், தானும் கிணற்றுக்குள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
எனினும், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதுடன், மீட்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை அம்பியுலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, தாயை கைதுசெய்யது நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.